
விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் ஸ்பெயினில் நமது மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன் தாரா இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது இருவரும் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிடும் விடியோவை பதிவிட்டு பின்வருமாறு கூறியுள்ளார்:
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்! உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களே இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்! ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்! உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது நாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.