12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்?

ட்விட்டரில் நடிகர் தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Published On :


ட்விட்டரில் நடிகர் தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் தனுஷ் ட்விட்டரில் தனது படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் வெளியாகும்போது மட்டும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் ப்ரமோ விடியோவுடன் வெளியானது. நடிகர் தனுஷ் இதனை ட்விட்டரில் பகிர, இயக்குநர் ஆனந்த் எல்.ராய், பிரசன்னா, கிருஷ்ணா உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Story image

இந்த நிலையில் இன்று (ஜூலை 9) நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டது. பின்னர் சில நிமிடங்களிலேயே ப்ளூ டிக் மீண்டும் அளிக்கப்பட்டது. பொதுவாக ட்விட்டரில் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படுவது வழக்கம். ஆனால் தனுஷ் தனது பெயரை மாற்றாத போது ப்ளூ டிக் ஏன் நீக்கப்பட்டது என தெரியவில்லை. 

நடிகர் தனுஷ் நடிப்பில் தி கிரேமேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்குவரவிருக்கின்றன. இதில் வாத்தி திரைப்படம், தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.