ஆகஸ்ட் 1 முதல் முடங்குகிறது தெலுங்கு சினிமா - அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர்கள்

ஆகஸ்ட் 1 முதல் முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.  
ஆகஸ்ட் 1 முதல் முடங்குகிறது தெலுங்கு சினிமா -  அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர்கள்
Published on
Updated on
1 min read

ஆகஸ்ட் 1 முதல் முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப் 2 படங்களைத் தவிர பெரும்பாலான தெலுங்கு படங்கள் நட்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் வருவாய் வெகுவாக குறைந்துள்ளதாம். 

காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 3 வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாவதால் மக்கள் திரையரங்குகளுக்கு வர மறுக்கின்றனர். 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தித்து விவாதித்துள்ளனர். இதனையடுத்து ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 10 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் எனவும் இது நடைமுறைக்கு வரும் வரை திரைப்பட படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைபெறாது என்று திட்டவட்டமான முடிவை எடுத்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக படங்களின் வசூலை ரூ.100 கோடி, ரூ.200 கோடி என கணக்கு காட்ட திரையரங்க டிக்கெட் ஒன்றின் விலையை ரூ.1000, ரூ.2000 என விற்கின்றனர். இதன் காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வர மறுக்கின்றனர் என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

வெகு விரைவில் தமிழ்நாட்டிலும் இந்த நிலை வரலாம் என கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com