12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வெளியானது தனுஷின் 'வாத்தி' பட முதல் பார்வை - டீசர் ?

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

Published On :

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தெலுங்கில் தனுஷின் வேலையில்லாத பட்டதாரி மற்றும் மாரி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கிலும் சார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Story image

இந்தப் படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 இந்தப் படத்தின் டீசர் நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்தப் படத்தை தயாரித்துவரும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.