தனுஷ் பெயரை நீக்கி அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து தனுஷ் பெயரை நீக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தனுஷ் பெயரை நீக்கி அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா
Published on
Updated on
1 min read

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்தனர். அந்த அறிவிப்பில் 'இருவரும் பிரிந்தாலும் நண்பர்களாக தொடர்வோம்' என்று குறிப்பிட்டிருந்தனர். 

அதற்கேற்ப ஐஸ்வர்யா இயக்கிய 'பயணி' பாடலைப் பகிர்ந்த நடிகர் தனுஷ், 'தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஐஸ்வர்யாவும் 'நன்றி தனுஷ்' என பதிலளித்திருந்தார். இது இருவரும் மீண்டும் இணைவதற்கான அறிகுறி என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து தனுஷ் பெயரை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பெயரை மாற்றியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ஆர்.ரஜினிகாந்த் என்றே இருக்கிறது. 

ஐஸ்வர்யா அடுத்ததாக ஹிந்தியில் காதல் கதை ஒன்றை இயக்கவிருக்கிறார். 'ஓ சாதி சல்' என்ற பெயருடைய இந்தப் படத்தை கிளௌட் 9 பிக்சர்ஸ் சார்பாக மீனு அரோரா தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com