சிம்பு, விக்ரம் படங்களில் முதலீடு செய்யக் கூடாது: தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுத்த சிவகார்த்திகேயன்

 தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவகார்த்திகேயன் வழக்கு தொடுத்துள்ளார். 
சிம்பு, விக்ரம் படங்களில் முதலீடு செய்யக் கூடாது: தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுத்த சிவகார்த்திகேயன்
Published on
Updated on
1 min read

கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா, சதிஷ், ரோபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். 

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடுத்துள்ளார். 

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு அளித்த ரூ.11 கோடி சம்பளத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வரிமானவரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனக்கு மீதமுள்ள சம்பள பாக்கியை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்குமாறும் கோரியிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் வழக்கு வருகிற மார்ச் 31 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com