மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சசிகுமார் இயக்கத்தில் புதிய படம்!

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 நவம்பர் 2022, 4:58 am

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காரி போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. 

மேலும், அவர் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் நாளை(நவ.18) வெளியாகவுள்ளது.

கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான்  இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார், ‘நீண்ட நாள்களுக்குப் பின் நான் மீண்டும் புதிய படத்தை இயக்க உள்ளேன். இதில், நான் நடிக்கவில்லை. வேறு பிரபலங்கள் நடிக்கிறார்கள். நடிகர் ரஜினியுடன் நடித்துவிட்டேன். மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். என் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’ , ‘காரி’ உள்ளிட்ட படங்கள் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.  ஒரு இடைவெளியுடன் வெளியாகியிருக்காலம். ஆனால், தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ காரணமாக இரண்டும் வெளியாகிறது. அவை வெற்றி பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் இயக்கத்தில் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு ‘ஈசன்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.