பாட்டு, நடனம் என களைகட்டிய நடிகர் சிவகுமார் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்டம் (விடியோ)

சூர்யா, ஜோதிகா, கார்த்தி உட்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய விடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
பாட்டு, நடனம் என  களைகட்டிய நடிகர் சிவகுமார் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்டம் (விடியோ)

சூர்யா, ஜோதிகா, கார்த்தி உட்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய விடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகர் சிவகுமார் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நேற்று மாலை (அக்டோபர் 23) தீபாவளி கொண்டாடியுள்ளனர். அப்போது நடிகர் சூர்யா, கார்த்தி, அவர்களது தங்கை பிருந்தா, ஜோதிகா, கார்த்தியின் மனைவி உள்ளிட்டோருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார். 

அதில் நடிகர் கார்த்தியுடன் நடமாடும் விடியோ, சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமாருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி,வையும் இடம்பெற்றுள்ளது. அந்த விடியோவில் தென்பாண்டி தமிழே  என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. நடிகர் சிவகுமாரும் ராதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்த பாசப் பறவைகள் என்ற படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com