சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

''இது ஹிந்து கலாசாரமா?'' 'காந்தாரா' படம் குறித்து சர்ச்சையாகப் பேசிய நடிகர் கைது!

காந்தார படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:50 pm

DIN

காந்தார படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா என்ற கன்னட திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

வெறும் ரூ.17 கோடி பொருள் செலவில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் இதுவரை ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் அறியப்படும் கன்னடப் படமாக காந்தாரா இருக்கிறது. 

பூத கோலா என்ற நாட்டுப்புற நடனமாடும் தெய்வ நர்த்திகர்கள் படும் துயரத்தை இந்தப் படம் பதிவும் செய்திருந்தது. படம் குறித்து பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, பூத கோலா நடனம் இந்துக் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 

கைது செய்யப்பட்டுள்ள நடிகர் சேத்தன் குமார்

கைது செய்யப்பட்டுள்ள நடிகர் சேத்தன் குமார்

ரிஷப் ஷெட்டியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கன்னட நடிகர் சேத்தன் குமார் பேசியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

''பூத கோலா நடனம் ஆதிவாசிகளின் கலை. அந்தக் கலையை ஆதிவாசிகள் வழி வழியாக செய்து வந்திருக்கிறார்கள். இது ஹிந்து கலாசாரத்தில் இல்லை. 

ஹிந்து சமயம் இந்தியாவில் தோன்றியதற்கு முன்பே ஆதிவாசிகள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து ஹிந்தியையும் ஹிந்து மதத்தையும் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று பேசியிருந்தார். இதனையடுத்து அவர் மீது கர்நாடக மாநில இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.