குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'சரியான தொல்லையப்பா' - யாரை சொல்கிறார் வந்தியத்தேவன் கார்த்தி? - புதிய அறிவிப்பு

பொன்னியின் செல்வன் குறித்து கார்த்தியின் பதிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

News image
Updated On :5 செப்டம்பர் 2022, 11:29 am

DIN

பொன்னியின் செல்வன் குறித்து கார்த்தியின் பதிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பொன்னியின் செல்வன் பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 6) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொன்னியின் செல்வன் 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கலந்துகொண்டால் தேசிய அளவில் பேசப்படும் நிகழ்வாக இருக்கும், பொன்னியின் செல்வன் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும். 

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயசித்ரா செம்பியன் மாதேவி வேடத்திலும், ரகுமான் மதுராந்தகன் வேடத்திலும் நடித்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நம்பியாக ஜெயராம் நடித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

இதனையடுத்து வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா? உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை. ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை. சரியான தொல்லையப்பா என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் - நம்பி கதாப்பத்திரத்தின் உரையாடல்கள் சுவாரசியமாக இருக்கும். அது படத்திலும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பை கார்த்தியின் பதிவு உணர்த்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.