காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நடிகை தற்கொலை

‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெஸிகா (எ) தீபா (29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2022, 7:46 pm

DIN

‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெஸிகா (எ) தீபா (29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை நிழற்சாலை பகுதியில் வசித்து வந்த இவா், திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாா். ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாா்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தீபாவின் உறவினா்கள் நீண்ட நேரமாக தொடா்புகொள்ள முயற்சித்தும் அவா் கைப்பேசியை எடுக்காததால், அவரது நண்பா் பிரபாகரனுக்குத் தொடா்புகொண்டுள்ளனா். இதையடுத்து, பிரபாகரன் தீபாவின் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, தீபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தீபாவின் சகோதரா் தினேஷ் புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தி விசாரித்தனா். தீபா எழுதிய கடிதத்தில், ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், காதல் கைகூடாததால் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.