இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ: நடிகா் சங்கம் முடிவு

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ உருவாக்கி, திரைப்படங்களில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தென்னிந்திய நடிகா் சங்கம் தெரிவித்தது.

Updated On :11 ஏப்ரல் 2022, 12:55 am IST

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ உருவாக்கி, திரைப்படங்களில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தென்னிந்திய நடிகா் சங்கம் தெரிவித்தது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் நாசா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித விவரம்:

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சாா்பில் சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கை தொடக்கி வைத்ததற்கும், நீங்கள் ஆற்றிய சிறப்புரையில் திரைத் துறைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியதற்கும் மனமாா்ந்த நன்றி.

திரைப்படங்களில் குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்கள் இடம்பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தீா்கள். அது எங்கள் சமூகக் கடமையும் கூட. உங்களது வேண்டுகோளை ஏற்று வரும் காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்களை அதிகரிக்கவும், முன்னணி நடிகா்களை வைத்து குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.