வாரிசு படத்தில் அனிருத்தும் பாடியுள்ளார்: இதோ 5 பாடல்களின் விவரம்! 

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடல் பாடியுள்ளார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  3வது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. 

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story image

அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 

1. ரஞ்சிதமே: பாடியவர்கள்: விஜய், எம்.எம். மானசி.
2. தீ தளபதி: பாடியவர்கள்: தமன், சிம்பு 
3. சோல் ஆஃப் வாரிசு: பாடியவர்- சித்ரா 
4. வாரிசு என்ட்ரி: பாடியவர்-அனிருத் 
5. வாரிசு மெலோடி: பாடியவர்கள்- சித் ஸ்ரீராம், ஜோனிடா காந்தி. 

Related Article

வாரிசு இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு கிடையாது: எங்கு பார்க்க முடியும்?

அண்ணனின் புதிய படத்தை அறிமுகப்படுத்தும் தம்பி!

இன்ஸ்டாகிராம் தீப்பற்றி எரிகிறது: பூஜா ஹெக்டேவின் புதிய படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

ரஜினியின் அடுத்த படம் ஜெய் பீம் இயக்குநருடனா? அப்போ பிரதீப் ரங்கநாதன்?

தள்ளிப்போகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியீடு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.