தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தள்ளிப்போகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2022, 3:57 pm IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

இயக்குநர்  ஆர். கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ராகுல், ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பிலிருந்து படக்குழு பின்வாங்கியுள்ளது. 

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து இரு படங்களை வெளியிடுவது வசூல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.