திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி.
இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிச.30 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா “எதற்கும் பயப்படாத கதாபாத்திரம் என்பதால் ‘ராங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நான் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளேன். கரோனாவுக்குப் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அதிகரித்துள்ளது. நான் அரசியல் கட்சியில் இணையப் போவதாக தவறான தகவல்கள் வெளியாகின்றன. நான் எந்தக் கட்சியிலும் இணையப்போவதில்லை. எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. அஜித், விஜய் இருவரையும் பிடிக்கும். அவர்களின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.