தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

அஜித்தின் வலிமையுடன் மோதவிருக்கிறாரா விஷால் ?

பொங்கலுக்கு விஷாலின் வீரமே வாகை சூடும் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

News image
Updated On :4 ஜனவரி 2022, 1:48 pm IST

விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு வலிமையுடன் வெளியாகவிருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் தள்ளிப்போக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து பொங்கலுக்கு வலிமை படம் மட்டும் தனியாக வெளியாக அதிக வாய்ப்பிருப்பதால், விஷால் தனது வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். வலிமை திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படம் 14 ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.