ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

'பாம் போட்டு உலகத்தை அழிச்சுட்டா நல்லா இருக்கும்': விஜய் ஆண்டனி

கரோனா நோய்த் தொற்று பணக்காரர்களை பெரிய பணக்காரர்களாகவும், ஏழையைப் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2022, 4:57 pm

DIN


கரோனா நோய்த் தொற்று பணக்காரர்களை பெரிய பணக்காரர்களாகவும், ஏழையைப் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா பற்றி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"கரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.