'பாம் போட்டு உலகத்தை அழிச்சுட்டா நல்லா இருக்கும்': விஜய் ஆண்டனி

கரோனா நோய்த் தொற்று பணக்காரர்களை பெரிய பணக்காரர்களாகவும், ஏழையைப் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


கரோனா நோய்த் தொற்று பணக்காரர்களை பெரிய பணக்காரர்களாகவும், ஏழையைப் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா பற்றி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"கரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com