நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா

நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா

நாடு முழுவதும் கரோனாவினால் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.  

அவரது பதிவில், ''எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டிருந்தேன். ஆனால் அந்த அளவுக்கு கரோனா தீவிரமாக பரவி வருகிறது. 

 நான் தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இன்னும் நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். விரைவில் நலம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com