கடந்த சில வாரங்களாக பிரபலங்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டும் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போது எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.
இதையும் படிக்க | தம்பி அருள்நிதி பட டீசரை வெளியிடும் அண்ணன் உதயநிதி
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களை விரைவில் சந்திக்க காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.