திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றாரா? சின்னத்திரை நடிகர் விளக்கம்

சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :22 ஜூலை 2022, 3:56 pm IST

சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் புலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து வருகிறார். 

இந்தத் தொடரில் அவர் நாயகி வெண்ணிலாவின் கல்லூரி தோழராக நடிக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோன்ற விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு தலை காதலால் இப்படி நிகழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார். 

இதனையடுத்து அவர் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகவேந்திரன் விளக்கமளித்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் பேசியதாவது, நான் ஏன் தற்கொலைக்கு முயலப்போகிறேன்? நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். நகைச்சுவைக்காக அந்த விடியோவை பகிர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.