குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தடகள வீரருக்கு நிகராகப் பயிற்சி எடுத்த சூர்யா: சூரரைப் போற்று மேக்கிங் விடியோக்கள்

சூரரைப் போற்று படம் உருவானது எப்படி என்பது குறித்து சூர்யாவும் இயக்குநரும் சற்று விரிவாகப் பேசியிருந்தார்கள்.

News image
Updated On :23 ஜூலை 2022, 4:21 pm IST

ஒரு படத்துக்காக சூர்யா எந்தளவுக்கு மெனக்கெடுவார் என்பதைப் பார்க்கும் வாய்ப்பு சூரரைப் போற்று மேக்கிங் விடியோக்களின் மூலம் ரசிகர்களுக்குக் கிடைத்தது.

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் 2020-ம் வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.  

திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை சூரரைப் போற்று படம் அள்ளியது.

படம் வெளிவருவதற்கு முன்பு,  சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் விடியோக்கள் வெளியிடப்பட்டன. 19 வயது கதாபாத்திரத்துக்காக சூர்யா எந்தளவுக்கு மெனக்கெட்டார் என்பது ஒரு விடியோவில் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தடகள வீரருக்கு நிகராகப் பயிற்சி எடுத்த காட்சிகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. அடுத்து வெளியிடப்பட்ட விடியோவில், சூரரைப் போற்று படம் உருவானது எப்படி என்பது குறித்து சூர்யாவும் இயக்குநரும் சற்று விரிவாகப் பேசியிருந்தார்கள். அந்த விடியோக்களை மீண்டும் இப்போது காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.