நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐரோப்பாவையே இந்தியாவுக்கு கொண்டுவந்துட்டாங்களே.! பிரபாஸின் ராதே ஷ்யாம் உருவான விதம் விடியோவாக வெளியானது

பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் உருவான விதம் விடியோவாக வெளியாகியுள்ளது. 

News image
Updated On :5 மார்ச் 2022, 1:19 pm IST

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, சத்யராஜ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள நிலையில், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

கடந்த 1970களில் ஐரோப்பா பின்னணியில் இந்தப் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜஸ்டின்  பிரபாகரன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு டிரெய்லர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் உருவானவிதம் விடியோவாக வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் ஐரோப்பாவை தத்ரூபமாக செட் போட்டு மற்றும் விஎஃப்எக்ஸ் உதவியுடன் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதைக் காட்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.