'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரிலும் நடித்திருந்தார்.
தற்போது சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது தொழில் மூலமாக பழக்கமான ராம் பிரபு என்பவர், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இரிடியம் விற்பனை செய்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி லாபம் கிடைக்கும் என்று நடிகர் விக்னேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி ரூ.1.82 கோடியை கொடுத்துள்ளார். நடிகர் விக்னேஷின் நண்பர்களும் ராம் பிரபுவிடம் சில லட்சங்களை கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | நினைவு தினம்: விசுவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரபலங்கள்!
பின்னர் ராம் பிரபுவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே விசாரித்தபோது, ஏற்கனவே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் தனது பணத்தை மீட்டு தருமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்
கரண்டிகளையும் சாப்பிடலாம்!
29 கி.மீ. கடல் நீச்சல்...
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

