பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :22 மார்ச் 2022, 11:37 am IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, நடிகர் செல்வராகவன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்க்ஸ்லே, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

Story image

இந்தப் படம் வருகிற ஏப்ரல் 13 திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎஃப் 2 படமும் வெளியாவதால், இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்தப் படம் 2 மணிநேரம் 35 நிமிடம் ஓடக் கூடியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.