நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் நடிகர் சூர்யா நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியது. கமல்ஹாசன் எழுதி பாடிய 'பத்தல... பத்தல...' எனும் பாடல் வெளியான சில மணிநேரங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2010ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் - திரிஷா நடித்த மன்மதன் அம்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா தோன்ற உள்ளார்.