கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

டிவிட்டர் ‘ப்ளூ டிக்’: எலான் மாஸ்க்குக்கு கங்கனா சொன்ன யோசனை!

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் டிவிட்டர் ‘ப்ளூ டிக்’ கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத்

Published On :

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் டிவிட்டர் ‘ப்ளூ டிக்’ கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரை எலான் மாஸ்க் வாங்கியது முதல் ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா, ஆதார் அட்டை இருக்கும் அனைவருக்கும் ‘ப்ளூ டிக்’ கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

தற்போதைய சூழலில் டிவிட்டர்தான் சிறந்த சமூக ஊடகமாக இருக்கின்றது. ப்ளூ டிக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ப்ளூ டிக் இல்லாத நபர்கள் முறையான ஆவணங்கள் இயலாத நபர்களா? உதாரணமாக, நான் ப்ளூ டிக் பெற்ற நபராக இருக்கிறேன். ஆனால், எனது அப்பா ப்ளூ டிக் வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால், 3-4 முறை நிராகரிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் முறையாக வாழவில்லையா? ஆதார் அட்டை உள்ள அனைவரும் சரிபார்க்கப்பட்டு ப்ளூ டிக் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.