இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வேள்பாரி திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாவல்களை படமாக்கும் நடைமுறை தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து சு. வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை படமாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 பாகங்களாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் வேள்பாரி என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... முதல்வர் மௌனம் காப்பது ஏன்? - அப்பாவு கேள்வி

நேரத்தை வீணாக்காதீர்கள்! தில்லி போலீஸ் தடியடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!







