கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அனுஷ்காவின் பிறந்தநாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!

நடிகை அனுஷ்கா நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Published On :


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜனிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். அதற்கான போஸ்டரை யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இது அவரது 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நிவின் பாலிஷெட்டி இணைந்து நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சமையல் கலைஞராக இருக்கும் படம் வெளியாகியுள்ளது. அதிக நாட்கள் ஆனாலும் இன்னும் அதேபோல் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Story image

“பிறந்தநாள் வாழ்த்துகள் அழகான நடிகை அனுஷ்கா ஷெட்டி” என யுவி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.  'அன்விதா ரவளி ஷெட்டி' எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.