கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜை தொடங்கியது. 

Published On :

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜை தொடங்கியது. 

தமிழில் நாளை எனும் படத்தை இயக்கிய உதய் மகேஷ் தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக வருகிறார். சமீபத்தில் வெளியான ‘பேமிலி மேன் 2’ தொடரில் செல்லம் சார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் வரவேற்பினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

2015இல் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் ஜி.வி.பிரகாஷ். 

Story image

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கவிதாலயாவுடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயாகனாக நடிக்கிறார். மலையாள நடிகை அன்ஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க உள்ளார். தேவதர்ஷினி ஜி,வி.பிரகாஷின் சகோதரியாக நடிக்க உள்ளார். சகோதரியின் மகளுடன் உள்ள உறவினைப் பற்றி படத்தின் கதை நகரும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஹசிம் அப்துல், டேனியல் அன்னே போப், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம் பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.