FOLLOW US

ON GOOGLE DISCOVER

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பாமக தலைவர் பதவி: வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்!

ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

News image

அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ் - DNS

Updated On :22 ஜூலை 2026, 2:22 pm IST

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திரும்ப பெற்றார்.

இதன்மூலம், பாமக தலைவராக அன்புமணியே தொடர்ந்து செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

பாமக பெயர், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடர்பாக, ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே இருந்து வந்த தந்தை - மகன் மோதல் அண்மையில் முடிவுக்கு வந்தது.

ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி தன்னுடைய குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று(ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தங்களுக்குள்ளான பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொண்டதாகவும், வழக்கை திரும்ப பெருவதாகவும் மனு தாக்கல் செய்தார்

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தது.

Summary

Ramadoss, the founder of the Pattali Makkal Katchi (PMK), withdrew the case he had filed in the Chennai Civil Court seeking to be declared the party's leader.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.