கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி வாடகை காரில் தவறவிட்ட ரூ.3 லட்சம் கரன்சி மீட்பு

தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி ஒருவா் வாடகை காரில் தவறவிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்க கரன்சியை

Delhi Police trace cab, return ₹ 3 lakh cash to South African delegate before flight

தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி ஒருவா் வாடகை காரில் தவறவிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்க கரன்சியை அவரிடம் ஒப்படைத்த தில்லி காவல்துறையினா் - டிஎன்எஸ்

Published On :

புது தில்லி: தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி ஒருவா் வாடகை காரில் தவறவிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்க கரன்சியை தில்லி காவல்துறையினா் மீட்டனா்.

மேலும், அவரது விமானப் பயணம் தொடங்குவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பு அந்தப் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்ததாவது:

ஞாயிற்றுக்கிழமையன்று, அந்தப் பிரதிநிதி தான் காரில் பணத்தை விட்டுச் சென்றதை உணா்ந்து உதவி கோரி காவல்துறையினரை அணுகினாா். அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் உடனடியாக அந்தக் வாகனத்தைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கினா்.

காவல் குழுவினா் தொடா்புடைய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு அந்தக் காரைக் கண்டுபிடித்ததன் மூலம், அப்பணம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட பணம், தென்னாப்பிரிக்க பிரதிநிதி தில்லியிலிருந்து தனது உடைமைகளுடன் புறப்படுவதை உறுதி செய்யும் வகையில், அவரது விமானப் பயணம் தொடங்குவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.