வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மீண்டும் திரைப்படம் இயக்கவிருக்கும் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:17 am

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி, ஷங்கர் - ராம் சரண் படம் ஆகிய இரண்டு படங்களில் வில்லனாக நடித்துவருகிறார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு என இவர் வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இதன் காரணமாக இவருக்கு வில்லன் வேடமே தொடர்ச்சியாக கிடைப்பதாக கூறப்படுகின்றன. இடையில் அவர் ஹீரோவாக நடித்த மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடித்துவரும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் திரைப்படம் இயக்கவிருக்கிறார். கில்லர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு துவங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என இவர் இயக்கிய படங்கள் எல்லாம் பெரும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.