ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரசிகர் வரைந்த படத்தினை ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றினார் நடிகர் விஜய்!

இலங்கை ரசிகர் ஒருவர் வரைந்த தனது படத்தினை நடிகர் விஜய் ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :29 அக்டோபர் 2022, 10:30 am IST

இலங்கை ரசிகர் ஒருவர் வரைந்த தனது படத்தினை நடிகர் விஜய் ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனது ரசிகர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது இலங்கையை சேர்ந்த ரசிகர் கஜேந்திரா கே.ஆர்.எஸ் என்பவர் விஜய் புகைப்படத்தினை டிஜிட்டல் ஓவியமாக வரைந்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் முகப்புப் படமாக மாற்றியுள்ளார் நடிகர் விஜய். 

இதனைப் பகிர்ந்த இலங்கை ரசிகர், “இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. முறை தான் ஒரு முறை தான் நீ பார்த்தால் அது வரமே. நன்றி தலைவா!” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.