ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ரசிகர் வரைந்த படத்தினை ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றினார் நடிகர் விஜய்!

இலங்கை ரசிகர் ஒருவர் வரைந்த தனது படத்தினை நடிகர் விஜய் ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :

இலங்கை ரசிகர் ஒருவர் வரைந்த தனது படத்தினை நடிகர் விஜய் ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனது ரசிகர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது இலங்கையை சேர்ந்த ரசிகர் கஜேந்திரா கே.ஆர்.எஸ் என்பவர் விஜய் புகைப்படத்தினை டிஜிட்டல் ஓவியமாக வரைந்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் முகப்புப் படமாக மாற்றியுள்ளார் நடிகர் விஜய். 

இதனைப் பகிர்ந்த இலங்கை ரசிகர், “இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. முறை தான் ஒரு முறை தான் நீ பார்த்தால் அது வரமே. நன்றி தலைவா!” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.