

நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது முழு மூச்சாக படங்கள் நடித்துக்கொண்டு வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய தொடர் வெற்றிகளுக்குப் பிறகு யாருடன் சேர்ந்து படம் நடிப்பார் என பெரும் எதிர்பார்ப்புள்ளது.
இதற்குதானே ஆசைப்பட்டாய் படத்தின் இயக்குநர் கோகுலடன் இணைந்து கரோனா குமார் படத்தில் நடிக்க இருந்தார். கோகுல் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்திருக்கும் நிலையில் நடிகர் சிம்பு இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் படத்தினை குறித்து தயாரிப்பாளர் அதிகாரபூர்வ தகவல் தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கடுத்து, கமல்ஹாசன் தயாரிப்பில் ‘சிம்பு 48’ படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.