ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இந்தப் படம் முதல் வார முடிவில் சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜெயிலர் 4 நாள்கள் வசூல் எவ்வளவு?
கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் ஜெயிலர் திரைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வரும் நிலையில், கமல்ஹாசனின் பாராட்டு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.