திரைப்படமாகிறது நான்குனேரி சம்பவம்!

திரைப்படமாகிறது நான்குனேரி சம்பவம்!

தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நான்குனேரி சம்பவம் விரைவில் திரைப்படமாகிறது.
Published on

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் சில நாள்களுக்கு முன்னா் பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சக மாணவா்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பலதரப்பினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, இளைய சமுதாயத்தினரிடையே ஜாதி, இன உணா்வு பரவும் பிரச்னையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா். அதற்கான, அரசாணையும் பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிக்க: விஜய் - 68 அரசியல் படமா?

இந்நிலையில், மாநிலத்தில் பெரிய அதிர்வைக் கிளப்பிய இச்சம்பவம் திரைப்படமாகிறது. கே.டி. கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கால் டாக்ஸி’ என்கிற படத்தை இயக்கிய பி.பாண்டியன் இப்படத்தை இயக்குகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com