இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மையோசைட்டிஸ் இந்தியாவின் தூதரானார் சமந்தா!

மையோசைட்டிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

சமந்தா

Updated On :6 பிப்ரவரி 2024, 6:39 pm IST


மையோசைட்டிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து கோடிக்கான ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா, சமீபத்தில் மையோசைட்டிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உடலின் நோய் எதிா்ப்பாற்றலே தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சிதைக்கும் நோய்தான் மையோசைட்டிஸ். இந்த நோய் சமந்தாவை பாதித்த பிறகு தான் பலருக்கு பரிச்சயமானது.

இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா, புதிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்து தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

சில படங்களுக்கு செய்திருந்த முன்பதிவுத் தொகையையும் திருப்பி அளித்து, நடிப்பதிலிருந்து தற்காலிகமாக (ஓராண்டு) ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து தனது தாயுடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ள சமந்தா, அங்கு மையோசைட்டிஸ் நோய்க்காக சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story image

இந்த நிலையில், மையோசைட்டிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மையோசைட்டிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Story image

இதன்மூலம், மையோசைட்டிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மையோசைட்டிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.