கேஜிஎஃப் - 3 கதை தயார்!

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் 3-வது பாகத்தின் கதை தயார் நிலையில் இருப்பதாக இயக்குநர் பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் - 3 கதை தயார்!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த திரைப்படம் கேஜிஎஃப். இப்படத்தின் இரண்டாம் வெளியாகி உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்தது.

தொடர்ந்து,  இப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் கேஜிஎஃப் - 3 பாகத்திற்கான அறிவிப்பு விடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் பிரஷாந்த் நீல், “கேஜிஎஃப் 3 ஆம் பாகத்தை நான் இயக்குவேனா எனத் தெரியாது. ஆனால், யஷ் கண்டிப்பாக இருப்பார். இப்படத்திற்கான, திரைக்கதை பணிகள் முடிவடைந்து படப்பிடிப்புக்குத் தயாராக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The most powerful promise kept by the most powerful man

KGF 2 took us on an epic journey with unforgettable characters and action. A global celebration of cinema, breaking records, and winning hearts. Here's to another year of great storytelling! #KGFChapter2#Yashpic.twitter.com/iykI7cLOZZ

— Hombale Films (@hombalefilms) April 14, 2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com