பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அபிஷேக் பச்சனை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்?

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

News image

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:52 pm IST

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், 1997ஆம் ஆண்டு ‘இருவர்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம்வந்த ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இதற்கிடையே, அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விரைவில் பிரிய இருப்பதாகவும் பாலிவுட்டில் சமீப காலமாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் அபிஷேக் பச்சன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் கையில் திருமண மோதரம் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமானதில் இருந்து அபிஷேக் பச்சன் எந்த பொது நிகழ்வுகளிலும் மோதிரம் இல்லாமல் கலந்து கொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், விவகாரத்து சர்ச்சை குறித்து அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ஜோடி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.