சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் அயோத்தி திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது பிரதீப் குமார் குரலில் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் சாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் பாடல்களுக்கு இசைமையத்துள்ளார்.
ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார்.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு போன்ற பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதீப் குமார் குரலில் காற்றோடு பட்டம் போல... எனத் தொடங்கும் இப்படத்தின் 2வது பாடல் தற்போது (பிப்.24) வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலை வெளியிட்டார். இப்பாடல் வெளியான சிலமணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


