தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பழிவாங்கும் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நான் எதிர்பார்த்த ஆள் இவர்தான்: காதலை உறுதிப்படுத்திய தமன்னா!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார். 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘விஜேஎஸ்51’எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர உடற்பயிற்சியில் கங்கனா!
இந்தப்படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஜஸ்டின் பிராபகரன் இசையமைக்க உள்ளார்.
தற்போது ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார், காந்தி டாக்கிஸ், யாதும் ஓரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.