சிம்புவின் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, இப்படத்தினை இயக்க உள்ளார்.
சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு 48 படம் மிகப் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும், இப்படம் சிம்புவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்
இந்நிலையில், நடிகர் சிம்புவின் 49வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.