மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

'தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து கரு. பழனியப்பன் விலகல்!

'தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து கரு. பழனியப்பன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :7 மார்ச் 2023, 12:26 pm

DIN

'தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து கரு. பழனியப்பன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக ஜி தமிழ் சேனலில் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், இயக்குநருமான கரு. பழனியப்பன் அந்நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் 2003-ல் ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். இந்த திரைப்படத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.

விஷால் நடித்த இவரது இரண்டாவது படம் சிவப்பதிகாரம். இதனையடுத்து  பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரைவைப் பெற்றார். இவரது அடுத்த படமான மந்திர புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து கரு. பழனியப்பன் சில படங்களில் இயக்கியும், நடித்தும் வந்தார். தொடர்ந்து, ஜி தமிழ் சேனலில் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில்,  'தமிழா தமிழா' நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கரு. பழனியப்பன் சமூக ஊடகங்களில் இதுகுறித்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜி தமிழ் உடனான நான்கு வருட 'தமிழா தமிழா' பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.! சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம்  என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! ..... நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.