இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தற்போது வாழை என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க: வெற்றிமாறனின் அடுத்த படம் இதுதான்...
இப்படத்திற்குப் பின் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், துருவ் விக்ரம் உடனான படத்தின் படப்பிடிப்பை மாரி செல்வராஜ் வருகிற ஜூலை மாதத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.