விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களின் நேரம் மாறுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழைய சீரியல்கள் முடிவடைந்து, புதிய சீரியல்களின் வருகையையொட்டி, முக்கிய சீரியல்களின் நேரத்தை விஜய் தொலைக்காட்சி மாற்றியுள்ளது.
மூன்று சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, 'ஸ்டார்ட் மியூசிக்' சீசன் 4 கேம் ஷோ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் பொன்னி, ஆஹா கல்யாணம் மற்றும் கிழக்கு வாசல் ஆகிய சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 20 முதல் சீரியல்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ஆஹா கல்யானம், ராஜா ராணி 2, தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல்களின் நேரத்தை மாற்றியுள்ளது விஜய் தொலைக்காட்சி.
இதையும் படிக்க: 'குக் வித் கோமாளியிலிருந்து...': குரேஷி நெகிழ்ச்சிப் பதிவு
தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாலை 6 மணிக்கும், ராஜா ராணி 2 சீரியல் மாலை 6.30 மணிக்கும், ஆஹா கல்யானம் சீரியல் மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.