பெண் நட்பின் மீது நம்பிக்கை ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம் நடிகை ஹரிபிரியா இசை என நடிகை சத்யா தேவராஜன் தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஓளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடிகை சத்யா தேவராஜன் நடித்து வருகிறார். இதேபோன்று நந்தினி பாத்திரத்தில் நடிகை ஹரிபிரியா இசை நடித்து வருகிறார்.
மூன்று மருமகள்களை மையமாக வைத்து எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்படடு வருகிறது. இதில் இரண்டாவது மருமகளாக வருபவர் நந்தினி.

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பெரும் ஆணாதிக்கம் கொண்டவராக வரும் ஆதி குணசேகரனை நேருக்கு நேர் நின்று எதிர்த்து பேசும் நந்தினியின் காட்சிகள், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.
ஆதி குணசேகரனின் தங்கை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சத்யா தேவராஜன் (ஆதிரை). கரிகாலன் உடனான ஆதிரையின் காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஹரிபிரியாவும், சத்யாவும் நெருக்கமாகியுள்ளனர். அவர்களின் குறும்புத்தன விடியோக்களை சமூகவலைதளத்தில் அவ்வபோது பகிர்ந்து வருவது வழக்கம்.
அந்தவகையில், நடிகை ஹரிபிரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சத்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பெண்கள் நட்பின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு நன்றி. அன்பு சகோதரியாக இருப்பதற்கும் நன்றி. தோழியாகவும் என் நலம் விரும்பியாகவும் நீ இருக்கிறாய். உனக்கான நான் என்றுமே இருப்பேன் என்பதை மறந்துவிடாதே! படப்பிடிப்பு இல்லையென்றாலும் உன்னுடன் இதுபோன்ற நெருக்கத்துடன் எப்போதுமே இருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

ஹரிபிரியா - சத்யாவின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பு: ஆலையின் போா்மென் கைது
பெருந்துறையில் தங்கி இருந்த வங்கதேசத்தவா் 4 போ் கைது
சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்: மூடப்பட்ட அரசுப் பள்ளிகளின் கதவுகள் திறக்கட்டும்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



