பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஜெயராம்!

மார்கோனி மத்தாய் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஜெயராம் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:39 am IST

இயக்குநர் மிஷ்கின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்த மிஷ்கின் மீண்டும் படங்களை இயக்குகிறார். 

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் படம் இயக்க உள்ளார் மிஷ்கின். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்கோனி மத்தாய் என்ற மலையாளப் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், ஜெயராமும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.