பிரபாஸ்.. திருமணம்.. குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்த அனுஷ்கா

நடிகர் பிரபாஸ் மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
அனுஷ்கா
அனுஷ்கா
Published on
Updated on
1 min read

நடிகர் பிரபாஸ் மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட படங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்துக்கான பிரமோஷன் பணிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார்.

அண்மையில், அவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம்திறந்து பேசினார்.

நடிகர் பிரபாஸுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்த முடிவு என் கையில் எதுவும் இல்லை. எங்களது ஜோடியை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும். இதற்குக் காரணம், அந்த கதையம்சம் மற்றும் படத் தொகுப்புகள் போன்றவைதான். எங்கள் இருவருக்கும் பொருத்தமான கதைகளை உருவாக்கினால் நாங்கள் மீண்டும் இணையலாம் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, 41 வயதாகும் நடிகை அனுஷ்காவிடம் திருமணம் பற்றி கேட்டதற்கு, மிக சப்தமாக சிரித்துவிட்டு, உண்மையாகவே, இதற்கு எந்த பதிலும் என்னிடம் இல்லை. அது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கென்று நேரம் இருக்கிறது. அப்போது அது இயல்பாக நடக்கும் என்று சிரித்தபடியே பதிலளித்தார்.

அண்மையில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவருமே ஒருபோதும் இது பற்றி வாய்திறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com