என் பெயரில் மோசடி: புகாரளித்த இயக்குநர் பாலா!

இயக்குநர் பாலா, தன் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக்கோரி புகார் அளித்துள்ளார்.
என் பெயரில் மோசடி: புகாரளித்த இயக்குநர் பாலா!

சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, வணங்கான் படத்தில் நாயகனாக அருண் விஜய்யும் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் முடிய உள்ளதால் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா தீவிரம் காட்டி வருகிறார்.

இதையும் படிக்க: லியோவில் கமல்ஹாசன்?

இந்நிலையில், பாலா பழனிச்சாமி என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு துவங்கிய யாரோ, இளம்பெண்களிடம் பாலா நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகவும் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் கவர்ச்சிப் படங்களை அனுப்புங்கள் என மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த இயக்குநர் பாலா, இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தன் பெயரில் நடக்கும் மோசடியை தடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com