லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சில தினங்கள் நடைபெற்றது.
இதில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: வெளியானது ஜி.வி.பிரகாஷின் அடியே டிரைலர்!
ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ தற்செயலாக படப்பிடிப்பு துவங்கிய திருவண்ணாமலையிலேயே அது முடிந்திருக்கிறது. லால் சலாம் குழுவினருக்கு நன்றி” எனப் பதிவிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.